search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் போராட்டம்"

    • போலீசாரின் செயலை கண்டித்து அணைத்தலையூர் பொது மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் இன்று கோவில் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.
    • அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று பால்குட ஊர்வலம் நடை பெற்றது. வழக்கமாக கங்கைகொண்டான் பெருமாள் கோவில் முன்பிருந்து தொடங்கும் பால்குட ஊர்வலம் அணைத்தலையூர் முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு வந்து சேரும்.

    இந்நிலையில் வழக்கமான பாதைக்கு மாற்றாக வேறு பாதை வழியாக பால்குட ஊர்வலம் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆனால் வழக்கமாக ஆண்டுதோறும் நாங்கள் செல்லும் வழியாக பால்குட ஊர்வலம் கொண்டு செல்வோம் என்று பொது மக்கள் தெரிவித்த போதும், அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    பின்னர் மாற்றுப்பாதை வழியாக பால்குட ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது.

    இதற்கிடையே போலீசாரின் செயலை கண்டித்து அணைத்தலையூர் பொது மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் இன்று முப்பிடாதி அம்மன் கோவில் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், தாழையூத்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் சீதா லட்சுமி, சந்திரசேகர், கனகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பிற்காக வஜ்ரா வாகனமும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
    • சம்பவத்தில் ரஜ்னேஷ் குட்டன் மட்டுமல்லாமல் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவி மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை மாணவி வழக்கம் போல பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பெற்றோரும் வேலைக்கு சென்று விட்டனர்.

    மாலையில் மாணவியின் பெற்றோர் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் மாணவி இல்லை. எப்போதும் மாணவி பெற்றோர் வருவதற்கு முன்பே வீட்டிற்கு வந்து விடுவார்.

    ஆனால் நேற்று மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று மகளை தேடி பார்த்தனர்.

    ஆனால் அங்கு அவர் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அச்சம் அடைந்தனர். மகளை காணாமல் தவித்தனர்.

    பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து, அக்கம்பக்கம் உள்ள பகுதிகளிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் மாணவி ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் வந்தது. இதை கேட்டதும் மாணவியின் பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தங்கள் மகளாக இருக்குமோ என்ற அச்சத்தில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடினர். அங்கு இறந்த நிலையில் கிடந்த மாணவியை பார்த்தனர். மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் கிடந்தார். அது மாயமான தங்கள் மகள் என்பதை அறிந்ததும் மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பைக்காரா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர். அந்த இடத்தில் ஏதாவது தடயங்கள் இருக்கிறதா? என தேடிப் பார்த்தனர்.

    அப்போது, மாணவி உடல் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. விசாரணையில் பள்ளிக்கு சென்ற மாணவியை சிலர் காரில் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை கைது செய்யும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என தெரிவித்து மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் ஊட்டி-கூடலூர் சாலையில் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் காணப்பட்டது.

    உடனடியாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நீண்ட நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்தே பொதுமக்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதித்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    சம்பவம் குறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்து கொன்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில் மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் ரஜ்னேஷ் குட்டன் மட்டுமல்லாமல் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ரஜ்னேஷ் குட்டன் பிடிபட்டால் மாணவி கொலையில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற விவரம் தெரியவரும்.

    ரஜ்னேஷ் குட்டனுக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரது நண்பர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ரஜ்னேஷ் குட்டன் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் வனத்துறையினருடன் இணைந்து போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற 9-ம் வகுப்பு மாணவியை கும்பல் ஒன்று காரில் கடத்தி கற்பழித்து கொன்ற சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காக்களூர் பகுதி மக்களுக்கு அருகில் உள்ள மற்றொரு சுடுகாட்டை பயன்படுத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • காக்களூர் பகுதி மக்கள் தங்களுக்கு தனியாக சுடுகாடு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர்.

    திருவள்ளூர்:

    திருப்பதியில் இருந்து நெமிலிச்சேரி வரை ரூ.364 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த சாலை திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுடுகாடு வழியாக செல்கிறது. இதையடுத்து அந்த சுடுகாடு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்த இடத்தில் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது சுடுகாடு இருந்த இடத்தில் இருந்த செடிகள் முழுவதும் அகற்றப்பட்டு உள்ளது.

    மேலும் காக்களூர் பகுதி மக்களுக்கு அருகில் உள்ள மற்றொரு சுடுகாட்டை பயன்படுத்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்கனவே பயன்படுத்தி வரும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் காக்களூர் பகுதி மக்கள் தங்களுக்கு தனியாக சுடுகாடு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது.

    இதற்கிடையே காக்களூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(48) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். சுடுகாடு நிலம் வழங்காததை கண்டித்து அவரது உடலை அப்பகுதியில் 4 வழிச்சாலை பணி நடக்கும் இடம் அருகே சாலையோரம் திடீரென எரித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுடுகாடு நிலம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    • கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் தரிசு நிலம் இருந்து வருகிறது.
    • கோவில் நிலத்தை பொதுமக்கள் மத்தியில் ஏலம் விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அரக்காசனள்ளி கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் தரிசு நிலம் இருந்து வருகிறது. இந்த நிலத்தை முறைகேடாக ஆவணங்களை பெற்று ஆக்கிரமிப்பு செய்து 4 பேர் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவில் நிலத்தை பொதுமக்கள் மத்தியில் ஏலம் விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே நேற்று நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசாரணை செய்ய அறிவுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கிராம மக்களிடையே விசாரணை நடத்தினார்.

    இந்த கோயில் நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதால், இதில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கோவில் நிலத்தை மீட்டுத் தரவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அரசிடமே ஒப்படைக்க போகிறோம் என தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா ஆவணங்களை எங்கே வேண்டுமானாலும் வீசி விட்டுச் செல்லுங்கள், நாங்கள் எதுவும் பண்ண முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வீசிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி இன்று அரக்காசனள்ளி கிராமத்தில் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் குடும்பங்களுடன் ஒட்டுமொத்த ஊரையும் காலி செய்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு அகதிகளாக வெளியேறுவோம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இறந்தவர் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் தனியார் தோட்டம் வழியாக மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
    • எதிர்ப்பு தெரிவித்ததால் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செந்துறை:

    நத்தம் அருகே சிரங்காட்டுபட்டி ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டிபுதூரை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் புதூர் மயானத்திற்கு கொண்டு சென்றனர். போகும்வழியில் ஆற்றில் தண்ணீர் போனதால் செல்லமுடியவில்லை.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது தோட்டத்து வழியாக சென்றனர். ஆனால் இதற்கு தர்மலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் உடலை கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பெரியசாமியின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் தர்மலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெரியசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    மங்களப்பட்டி புதூர் மயானத்திற்கு நிரந்தரமாக சாலை அமைத்து தர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
    • கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது.

    சேத்தியாத்தோப்பு;

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை கிராமங்களுக்குள் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து என்.எல்.சி. நிர்வாகம், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்கிராமங்களில் நடைபயணம் மேற்கொண்டார். என்.எல்.சி. நிர்வாகம் தனியாரிடம் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, இந்த நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் நடைபயணத்தை நடத்தி சென்றார்.

    இந்நிலையில் புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று நள்ளிரவு கிராமங்களின் பொது இடங்களிலும், 300-க்கும் மேற்பட்டோர் வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    தகவலறிந்து இன்று விடியற்காலையில் புவனகிரி டி.எஸ்.பி தீபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இன்று நாடு முழுவதும் குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே, பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது என்று கிராம மக்களிடம் அறிவுறுத்தினார். இதையேற்ற கிராம மக்கள் பொது இடங்களில் இருந்து கருப்பு கொடியை அப்புறப்படுத்தினர். அதே வேளையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி பறந்து வருகிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    வாணாபுரம் அருகே உள்ள இளையாங்கன்னி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெபஸ் டின் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி குழந் தைமேரி.இவர்களுக்கு 3 மகள் களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று ஜெபஸ்டின் இ ளை யாங்கன்னி அருகே தொண் டாமனூர் பகுதியில் உள்ள ராமசாமி என்பவரின் நிலத் தில் கரும்பு வெட்டுவதற்காக சென்றார்.

    அங்கு கரும்பு வெட்டும் போது அறுந்து கிடந்த மின் கம்பி ஜெபஸ்டின் மீது உரசிய தாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சௌந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர்.

    அப்போது சம்பவ இடத் திற்கு மின்துறை அதிகாரிகள் வர வேண்டும் என்று ஜெபஸ் டினின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி னர்.

    காலை 9 மணிக்கு சம்பவம் நடந்த நிலையில் மின்துறை அதிகாரிகள் பகல் 12 மணி வரை யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த ஜெபஸ்டி னின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை பெருந் துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு கள்ளக் குறிச்சி-திருவண்ணா மலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை மறியலை கைவிடவில்லை, இதனைய டுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ் வினி மற்றும் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா, வாணா புரம் வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் அங்கு வந்து ஜெபஸ்டின் உறவினர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். ஆனால் தொடர்ந்து சமாதானம் ஆகாத உறவினர் கள் பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு முற்றுகை போராட் டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர் கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகா ரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் ஜெபஸ்டினின் உடல் பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகு தியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தங்களது ஊரில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
    • தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பழைய சுக்காம்பட்டி கிராமம். மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    இதனை அறிந்த கிராம மக்கள், தங்களின் ஊரில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுக்கடைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டினர். இந்நிலையில் மதுக்கடை தொடங்க திட்டமிட்டிருந்த கட்டிடத்தில் நேற்று இரவு மதுபாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த கிராம மக்கள் இன்று காலை மேலூர்-அழகர்கோவில் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரெபோனி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மேலும் தாசில்தார் சரவணபெருமாளும் பழைய சுக்காம்பட்டி கிராமத்திற்கு வந்தார். தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தங்களது ஊரில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதில் சமரசம் அடைந்த கிராம மக்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது.
    • நிலம் உள்ளவர்கள் அவர்களது நிலத்திலே அடக்கம் செய்து விடுகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி வட்டம் வேகாக்கொல்லை மதுரா பாவைக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது தந்தை தந்தை வெள்ளக்கண்ணு நேற்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இந்த கிராமத்தில் உடல் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தினால் நல்லடக்கம் செய்வதில் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது பற்றி தகவல் வந்ததும் பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன்,துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் பிரியா லதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபேச்சுவார்த்தை நடத்தினர்.

    விரைவில் மயானத்திற்கு செல்ல நிரந்தரமான பாதையை அமைத்து தரப்படும் எனஅதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கைப்பாடை மூலமாகபட்டா நிலத்தின் வழியாக பிணத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ஊரில் யாராவது இறந்தால் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. நிலம் உள்ளவர்கள் அவர்களது நிலத்திலே அடக்கம் செய்துவிடு கின்றனர். நிலம், வீடு, வாசல் இல்லாதவர்கள் இறந்தால் அவர்களின் பாடு திண்டாட்டம் ஆகிறது. எனவே நிரந்தர தீர்வுக்கு அரசு உதவ வேண்டும் என்றனர். 

    • நிற்காமல் சென்றதால் ஆத்திரம்
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை - வேலுார் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் ஊசாம்பாடி கிராமம் உள்ளது. இங்கு 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் எல்லா தேவைகளுக்கும் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்குதான் செல்லவேண்டும்.

    நேற்று மதியம் வேலுாரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, கண்டக்டருக் கும், பயணிகளுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதன்பிறகே திருவண் ணாமலை தாலுகா போலீ சார் அங்கு வந்து, சுதந்திர தினத்தன்று கூட மறியலில் ஈடுபட்டால் எப்படி? மேலும் சாலையின் இரு புறமும் பல கி.மீ. தொலை வுக்கு போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளது என கூறினர்.

    ஊசாம் பாடியைச் சேர்ந்த 5 பேர் போளூரில் பஸ் ஏறி ஊசாம் பாடிக்கு டிக்கெட் எடுத் துள்ளனர். அப்போது கண் டக்டர், "அங்கு பஸ் நிற்காது, டிரைவரிடம் போய் சொல்லுங்கள்" என கூறியுள்ளார்.

    "டிக்கெட் வாங்கியது நீங்கள்தான். நாங்கள் ஏன் டிரைவரிடம் சொல்ல வேண்டும்?" என தகராறு செய்ததால், ஊசாம்பாடி யில் பஸ் நிறுத்தப்பட்டது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, "பிரச் னைக்கு உள்ளான பஸ்சை மட்டும் நிறுத்துங்கள். மற்ற வாகனங்கள் செல்லட்டும்"என போலீசார் கூறினர்.

    அதை ஏற்று, 225 நம்பர் பஸ்சை மட்டும் சிறை பிடித்த மக்கள், மற்ற வாக னங்கள் செல்ல அனுமதித்தனர்.

    அதன்பிறகே, திருவண்ணாமலை போக்குவரத்து அலுவல கத்திலிருந்து டிப்போ மேலாளர் கலைச்செல்வன் மதியம் 2.30 மணிக்கு அங்கு வந்தார்.

    தொடர்ந்து, "நாளையி லிருந்து (இன்று) 225 என்ற எண் கொண்ட' எல்லா பஸ்களும் ஊசாம்பாடியில் கட்டாயமாக நின்று செல்லும். அப்படி நிற்கா மல் செல்லும் பஸ்கள் மீது என்னிடம் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்றார். அதை ஏற்று அரசு பஸ்சை மக்கள் விடுவித்தனர்.

    • திட்டக்குடி அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
    • அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கை கிராமத்தில் அமைந்துள்ள சாந்ப்ப அய்யனார் கோவிலில் அனைத்து சாதியினரையும் அனுமதிக்க வேண்டுமென திட்டக்குடி வட்டாட்சியரிடம் இது சம்பந்தமாக மனு கொடுத்துள்ளனர். இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும் எனக்கோரிக்கை வைத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் , கையில் கருப்பு கொடி ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • சுருக்குமடி வலை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் 30 மீனவ கிராம மக்கள் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால்தோணி துறை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மீனவர்கள் விசைப்படகு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகிறார்கள். இதற்கிடையில் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன் வளம் குறைகிறது என்று கூறி மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் ஒரு சில மீனவ கிராம மக்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர். இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதனிடையே கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனை கண்டித்து கடலூர், மயிலாடுதுறை மாவட்ட புதுவைமாநில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த கூடாது, இரட்டை மடி வலையை உபயோகிக்கூடாது. அதிக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்த கூடாது என தெரிவித்தனர். அதன்படி இன்று மீனவர்கள் சாமியார்பேட்டை கடற்கரையில் கருப்பு ெகாடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளம் வெறிச்சோடியது.

    ×